இலங்கையில் எமது பணிகள்.


சிறுவர்களின் கல்வித் திட்டம்.

இலங்கையில் பல மாவட்டங்களிலும் சுனாமியாலும் யுத்தத்தினாலும் தங்கள் தாய்தகப்பனை இழந்த ஆதரவற்ற பிள்ளைகளை ஆதரிக்கவும் சமுதாயத்தில் உயர்ந்தநிலைக்கு கொண்டுவரவும் அவர்கள் கல்வித் தேவைகளையும் அடிப்படை வாழ்கை தேவைகளையும் ஆண்டவராகிய இயேசுக்கிறிஸ்துவின் அன்பின் நிமித்தம் சபையினூடாக தாங்கிவருகின்றோம்  இதுவரையில் 80பது பிள்ளைகளுக்கு மாதம் ஒன்றிற்கு ஒரு பிள்ளைக்கு 500 ருபா வீதம் கொடுத்து உதவுகின்றோம.; இன்னும் அதிகமாய் உதவிசெய்ய ஆண்டவராகிய இயேசு தாமே வழிகளைத்திறப்பாராக.




விதவைகள் உதவித் திட்டம்.

இலங்கையில் பல மாவட்டங்களிலும் சுனாமியாலும் யுத்தத்தினாலும் கனவனை இழந்து எந்த ஒரு உதவியும் அற்று வாழ வழியின்றித்தவிக்கின்ற விதவை சகோதரிகளுக்கு மாதம் ஒன்றிற்கு ஒரு சகோதரிக்கு 3000ருபா வீதம் கொடுத்துதவிவருகின்றோம.;  ஆண்டவராகிய இயேசுதாமே தமது மிகுந்த கிருபையினால் இந்த ஊழியத்தையும் ஆசீர்வதிப்பாராக.



விதவைகள் சுய தொழில் திட்டம்.

பல மாவட்டங்களிலும் எந்த ஒரு உதவியும் இன்றி வாழ்கின்ற தாமாகவே முன்னேறவேண்டும் என்று விரும்புகின்ற விதவைச் சகோதரிகளுக்கு சுயதொழில் செய்வதற்கு நமது சபையினால் கிறிஸ்துவின் நேசக்கரம் நீட்டிவருகின்றோம். இதனூடாக ஒரு சகோதரிக்கு 25000 ருபா கொடுத்து உதவுகின்றோம். ஆதைக் கொண்டு அவர்கள் தையல்மெசின் வாங்கியும,; மாடு ஆடுவாங்கியும,; கோழிகள்வாங்கியும,; தோட்டங்கள் செய்தும், தங்கள் வாழ்வை மெம்படுத்திவருகின்றார்கள.; இவ் ஊழியங்கள் இன்னும் பெருக இயேசுதாமே கிருபையளிப்பாராக.




"திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறதும் உலகத்தால் கறைபடாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்ளுகிறதுமே பிதாவாகிய தேவனுக்குமுன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது."

யாக்கோபு 1 அதிகாரம் 27.